Reg No. 137/2021
Reg No. 137/2021

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

preview

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • 1.NTKS எப்படி ஆரம்பிக்க பட்டது?
  • எங்கள் பழைய சங்கம் ஏற்பாடு செய்த கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் பங்கேற்றேன் ,அந்த சங்க கூட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சங்க தலைவர் முத்துக்குமார் அவர்கள நடைபெற்ற கூட்டத்தில் பல நல திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்கள் வரவேற்க படாமலும் அதில் உடனடியாக திட்டங்கள் செயல்படுத்த முன்னேற்பாடுகள் செய்யப்படாததை குறித்தும் உள்ள குறைகளை தங்கள் ஆதங்கமாக தெறிவித்தார .என்னையும் என் குழுவையும் அணுகி தங்களுக்கு ஒரு அமைப்பு உருவாவதற்கு உதவுமாறு கேட்டு கொண்டனர். மேலும் என் பழைய சங்கத்தில் இருந்து விலகிய பிறகு ,சென்னையிலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்க டிஜிட்டல் மயமாக்களையும், நவீனத்துவதையும் குறிக்கோளாக கொண்டு இச்சங்கம் ஆரம்பிக்கபட்டது.
  • 2. இதை ஆரம்பிப்பதற்க்கு போதுமான அனுபவம் உங்களிடம் உள்ளதா?
  • நான் ஒரு தையல் கலைஞனாக பிறந்தேன், தையல் தொழிலை மட்டுமே பயிற்சி செய்தேன். சென்னையில் இருந்து நீலகிரி வரை விரிந்திருக்கும் பதிவுசெய்யப்பட்ட 400 உறுப்பினர்களின் பலத்துடன் இந்த குழுவைத் தொடங்க எங்களால் முடிந்தது . கடந்த 70 ஆண்டுகளாக தொழில்துறையில் ஈடுபட்டுள்ள நபர்களையும் சமீபத்திய டிஜிட்டலைசேஷன் செயல்பாடுகள் தெரிந்த இளைய தலைமுறையினரையும் எங்கள் சங்கத்தில் கொண்டுளோம்.
  • 3. இந்த சங்கத்தினால் தையற்கலைஞர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
  • உங்களை நல வரியத்தில் சேர்ப்பது. (அந்தந்த மாவட்ட அடிப்படையில் உள்ள உங்கள் தலைவரை அணுகவும்) அரசாங்கத்தால் நடத்தப்படும் பல்வேறு திட்டங்கள், நிலம் போன்றவை , இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் படி.
  • 4. NTKS எவ்வாறு கட்டமைக்கபட்டுள்ளது ?
  • எங்கள் சங்கம் சட்டக் குழு, கணக்காளர்கள், ஆர் & டி மற்றும் ஐடிக்கான (ஈகாம் மற்றும் மொபைல் பயன்பாடு) சரியான குழுவை கவனமாக தேர்ந்தெடுத்துள்ளது. எங்கள் சங்கத்தின் மத்திய குழுவை தவிர அனைத்து மாவட்டங்களிலும் எங்களது சங்கத்தின் அலுவலக பொறுப்பாளர்கள் உள்ளனர் அரசாங்கத்தால் நடத்தப்படும் அனைத்து திட்டங்களையும் பெறுவதற்கு நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம், அதற்காக நாம் அனைவரும் மொத்தத்தில் சேரும்போது, ​​அதிக மறுசீரமைப்பு மற்றும் ஆதரவிற்காக பல நலத்திட்டங்களை அரசாங்கத்திடம் கோரலாம்.